எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார் – மஹிந்த அறிவிப்பு

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கு கூட நாங்கள் தயார்.
இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார்.
(Visited 16 times, 1 visits today)