மத்திய கிழக்கு

நாங்கள் அஞ்சவில்லை – இராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா பதிலடி

“நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. எங்கள் மக்களைப் பாதுகாக்க எதையும் செய்ய தயார்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்-ஷாரா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளித்துள்ள, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு ஆசியாவிலுள்ள சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில், ட்ரூஸ் சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் மீது, சிரிய அரசுக்கு ஆதரவான சில இஸ்லாமிய குழுக்கள் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தன. இதில் 200க்கும் மேற்பட்ட ட்ரூஸ் மக்கள் உயிரிழந்தனர்.

ட்ரூஸ் சிறுபான்மை மக்கள், இஸ்ரேல் மற்றும் லெபனானிலும் வாழ்வதால், அவர்களுக்குத் துணைநிலையாக, இஸ்ரேல் ராணுவம் நேற்று சிரிய அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவ தலைமையகம் குறிவைக்கப்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து, துருக்கி மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக, இரு தரப்பும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தின.

இந்த சூழ்நிலையின் பின்னணியில், சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா கூறியதாவது:

“நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்துள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தயக்கமின்றி போராட தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்பது மிகப் பெரும் தவறாகும்.” என்றார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!