இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை இன்னும் சில மாவட்டங்களுக்கு அபாய நிலையில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் (13.03) கொழும்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 37.9 செல்சியஸ் பாகையாக பதிவாகியுள்ளதுடன், மேல், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று ஆபத்தான வெப்பமான காலநிலை நிலவியதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 40 times, 1 visits today)