ஆசியா

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி!

கிழக்கு இந்தோனீசியாவின் லக்கி-லக்கி எரிமலை குமுறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறியதில் அக்கம்பக்க கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தின் ஃபுளோரெஸ் தீவில் அந்த எரிமலை உள்ளது.உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.57 மணிக்கு எரிமலை சீற்றமடைந்ததைத் தொடர்ந்து சிவப்பு நிற தீக்குழம்பு வெளியேறியது. அந்த வெடிப்பில் சாம்பலும் பாறைத் துகள்களும் பறந்து விழுந்தன.

எரிமலை மற்றும் பூகோள ஆபத்துத் தணிப்பு மையத்தின் பேச்சாளரான ஹாடி விஜாயா இதனை திங்கட்கிழமை (நவம்பர் 04) தெரிவித்தார்.

நிலைமையை ஆராய்ந்த அதிகாரிகள், எரிமலை ஆபத்து நிலையை நான்காம் நிலை என்னும் உச்சகட்டத்துக்கு உயர்த்தினர்.

எரிமலையைச் சுற்று வட்டாரத்தில் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்போரை பத்திரமாக வெளியேற்றுமாறு அந்த மையம் கேட்டுக்கொண்டது.

வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்பும் பாறைகளும் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு அமைக்கப்பட்டு இருந்து குடியிருப்புகளைச் சேதமடைந்ததோடு பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்ததாக ஹாடி கூறினார்.

திங்கட்கிழமை காலை வரை குறைந்தபட்சம் ஒன்பது பேர் எரிமலை வெடிப்பால் உயிரிழந்ததாக கிழக்கு ஃபுளோரெஸ் வட்டார உள்ளூர் அதிகாரி ஹெரோனிமஸ் லாமாவுரான் தெரிவித்தார்.அத்துடன், ஏழு கிராமங்களையும் எரிமலைச் சீற்றம் சீர்குலைத்ததாக அவர் கூறினார்.

“இன்று (திங்கட்கிழமை) காலை முதல் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்தில் பத்திரமான இடங்களில் அவர்களைத் தங்க வைத்துள்ளோம்,” என்றும் அந்த அதிகாரி சொன்னார்.

(Visited 75 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்