பிரித்தானியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல் : NHS விடுத்துள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் ஃப்ளூ காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
என்ஹெச்எஸ் இங்கிலாந்து தரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் அளவு கடந்த ஆண்டின் உச்சத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,629 காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களில் 125 பேர் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகள் பள்ளி மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் வைரஸ் பரவல் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கூறியுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)