வட அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – பலர் காயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வளாகத்தில் உள்ள அல்டீரியா தியேட்டர் எனும் அரங்கில் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் வெளியேவரும் போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரிச்மாண்ட் பொலிஸார் தலைவர் ரிக் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

இறந்தவர்கள் இருவரும் ஆண்கள். ஒருவருக்கு வயது 18. மற்றொருவருக்கு வயது 36. இருவரும் தந்தை, மகனாவர். இந்தச் சம்பவம் வர்ஜினியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கி தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர்.

இதில் தற்கொலைகளும் அடங்கும். அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள வழங்கப்படும் அனுமதி தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர ஆளும் பைடன் அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content