இலங்கை

இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 30% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஒகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரிகளை அதிகரித்தால், அந்த சதவீதம் புதிதாக அறிவிக்கப்பட்ட 30% உடன் சேர்க்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.

இதுவரை இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஆடை, தேயிலை, சுவை பொருட்கள், மீன், தேங்காய் பொருட்கள், இரப்பர் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் கனிம கற்கள் ஆகும்.

அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்தே அதிக அளவில் ஆடை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதுடன், இந்த வரி விதிப்புடன் அந்தத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

May be an image of text

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்