செய்தி

பிணை கைதிகளை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க டிரோன் விமானங்கள்!

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 440 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த டிரோன் விமானத்தால் தொடர்ந்து 27 மணி நேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தது.

அதிலுள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தபடி மனித உடலின் வெப்பத்தை வைத்து பிணை கைதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் ராணுவத்திற்கு தகவல் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஒரு மணி நேரம் போர் விமானங்களை இயக்க ஆறரை லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், பாதி செலவில் இவற்றை இயக்கிவிடலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!