ஐரோப்பா

பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாமல் பறந்த ரஷ்ய விமானம்!

ரஷ்யா அண்மைக்காலமாக பிற நாடுகளின் வான்பரப்பில் ஊடுருவி வருகின்றது. இது சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) பால்டிக் கடலுக்கு மேலே அடையாளம் தெரியாத வகையில் ரஷ்யாவின் கண்காணிப்பு விமானம் ஒன்று பறந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட  ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த விமானப்படை போர் விமானங்கள் அதனை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய IL-20 உளவு விமானத்தைக் கண்காணிக்கவும் புகைப்படம் எடுக்கவும் சர்வதேச வான்வெளியில் இரண்டு ஸ்வீடிஷ் கிரிபன் ஜெட் விமானங்களும் இரண்டு ஜெர்மன் யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் கவனமுடன் செயற்படுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்