ஐரோப்பா செய்தி

ரஷ்ய நிழல் கடற்படை கப்பல் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

மத்தியதரைக் கடலில் ரஷ்ய “நிழல் கடற்படை” எண்ணெய் டேங்கரான கென்டிலைத் தாக்க முதன் முறையாக  வான்வழி ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன்  கூறியுள்ளது.

SBU பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

லிபியாவின் கடற்கரையிலிருந்து  2,000 கி.மீ.க்கு தொலைவில் இருந்த கப்பலை குறிவைத்தே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

மேற்கத்தேய நாடுகளின் தடைகளுக்கு மத்தியிலும் பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் ரஷ்யா பொருளாதாரத்தை நிலைநிறுத்தி வருகிறது.

இதன்மூலம் பெறப்படும் நிதி போரை தொடர்ந்து நடத்த உதவிப்புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பல் போக்குவரத்தை முடக்க உக்ரைன் மேற்கொண்டுவரும்  முயற்சியின் ஒருபகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!