ஐரோப்பா

சொந்த நாட்டுக்குள்ளேயே தாக்குதல் நடத்திய உக்ரைன் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்!

கெர்சன் (Kherson) பிராந்தியத்தின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“கோர்லியில் (Khorly)  கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள விடுதியை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட தகவல்களின்படி, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 20இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா (Maria Zakharova), உக்ரைன் பொதுமக்கள் மீது “பயங்கரவாத தாக்குதலை” நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து  உக்ரைன் அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!