ஐரோப்பா

UK – மென்செஸ்டர் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்!

பிரித்தானியாவின்  மான்செஸ்டர் விமான நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் “அசாதாரண நடத்தையைக் காட்டியதற்காக” 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக  காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.

அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் தடுப்பு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மருத்துவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் துரதிஷ்ட வசமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்துறை அலுவலகம் வழக்கை IOPC-க்கு பரிந்துரைத்த பின்னர், மரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 40 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்