ஐரோப்பா முக்கிய செய்திகள்

போலி மின்னஞ்சல்கள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை

ஹேக்கிங் மோசடி முயற்சிகள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்களால் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகள் செயலிழப்புடன் தொடர்புடைய சூழ்நிலையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள இணையத் தள சைபர்-பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முகவர் நிறுவனங்களே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இணையங்கள் செயலிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எவ்வாறாயினும் தீங்கிழைக்கும் நடவடிக்கையால் இது ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இருப்பினும் சில மோசடியாளர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வமாக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள இணைய தள சைபர் முகவர் நிறுவனங்கள் பொது மக்களை எச்சரித்துள்ளன.

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!