ஆசியா

தைவானை மணிக்கு 184 கிலோமீற்றர் வேகத்தில் தாக்திய ‘கொங் ரே’ சூறாவளி ; இருவர் மரணம்!

தைவானை மிகப் பெரிய சூறாவளி உலுக்கியதைத் தொடர்ந்து, ஊழியர்கள் விழுந்த மரங்களையும், கடை உரிமையாளர்கள் இடிபாடுகளையும் அகற்றி வருகின்றனர்.

‘கொங் ரெ’ எனும் அந்தச் சூறாவளியில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.அச்சூறாவளி, அக்டோபர் 31ஆம் தி திககிழக்குத் தைவானை மணிக்கு 184 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.மரங்கள் சரிந்ததோடு, வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

தலைநகர் தைப்பேயில் அக்டோபர் 31ஆம் திகதி, மின்சாரக் கம்பி விழுந்ததில் 48 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக பதிவானது.சூறாவளியால் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தேசிய தீயணைப்பு அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய தைவானில் உள்ள மலைப்பகுதிகளுக்கு வேட்டையாடச் சென்ற நால்வருக்கான தேடல் பணிகள் தொடர்கின்றன. சூறாவளி தாக்கியதிலிருந்து அவர்களைக் காணவில்லை.

நவம்பர் 1ஆம் திகதி ‘கொங் ரெ’ சூறாவளி தைவான் நீரிணையைக் கடந்து சீனாவை நோக்கிச் செல்வதாக மத்திய வானிலை நிர்வாகம் கூறியது.

இதற்கிடையே, தைவான் வழக்கநிலைக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. அலுவலகங்கள், உணவகங்கள், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கிழக்குக் கடலோரப் பகுதியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சில இடங்களில், சூறாவளி காரணமாக ஒரு மீட்டருக்கும் அதிகமான நீர் பதிவானதாக மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்தது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!