கொலராடோ விமான நிலையத்தில் இரு சிறிய விமானங்கள் மோதி விபத்து – ஒருவர் மரணம்

வடகிழக்கு கொலராடோவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபோர்ட் மோர்கன் நகராட்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஒரு செஸ்னா 172 மற்றும் எக்ஸ்ட்ரா ஃப்ளூக்ஸெக்பாவ் EA300 ஆகியவை மோதிக்கொண்டதாக பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு விமானங்களிலும் தலா இருவர் பயணித்த போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததாக மோர்கன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செஸ்னாவில் இருந்த இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன, மற்றொரு விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மற்றவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)