இந்தியா

ஆந்திர மாநிலதில் சிறை அதிகாரியை சுத்தியலால் தாக்கிவிட்டு இரு கைதிகள் தப்பியோட்டம்

ஆந்திர மாநிலத்தில் சிறை அதிகாரியை சுத்தியலால் தாக்கிவிட்டு இரு கைதிகள் தப்பியோடி உள்ளனர். ஆந்திர மாநிலம், அனக்கப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறையில் பணிபுரியும் வீரராஜு வெள்ளிக்கிழமை மாலை (செப்டம்பர் 5) சிறை நுழைவு வாயில் அறையில் இருந்தார்.

அப்போது, ஓய்வூதிய பண மோசடி வழக்கில் தொடர்புடைய ரவிக்குமார், திருட்டு வழக்கில் கைதான பெஜவாடா ராமு இருவரும் சேர்ந்து சுத்தியலால் வீரராஜு தலையில் சரமாரியாகத் தாக்கினார்கள்.

கடுமையாகத் தாக்கப்பட்ட வீரராஜு மயங்கி விழுந்துள்ளார். அவரது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்த கைதிகள் இருவரும் முன்பக்கக் கதவை திறந்து தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை, தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனர். கைதிகள் வீரராஜுவை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!