இலங்கை செய்தி

மாலபேயில் நச்சு இரசாயன புகையை சுவாசித்த இருவர் உயிரிழப்பு

மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நச்சு புகையை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை மற்றும் கஹந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 45 மற்றும் 63 வயதுடையவர்கள், அவர்கள் கலக்க முயன்ற சில இரசாயனங்கள் நச்சு புகையை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நச்சுப் புகையால் பாதிக்கப்பட்ட இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 49 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை