தீர்ப்பை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கோரும் டிரம்ப்

பரஸ்பர வரி முறையின் கீழ் பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்யுமாறும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
வழக்கை விரைவில் விசாரிக்குமாறும் அவர் கோரியுள்ளார்
டிரம்பின் பரஸ்பர வரி முறை அமெரிக்க பொருளாதாரத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் திறனைக் கொண்டுள்ளது என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பல வரிகள் சட்டவிரோதமானவை என்றும், அமெரிக்க ஜனாதிபதி மற்ற நாடுகள் மீது வரி விதிக்க அதிகாரம் இல்லை என்றும் நாட்டின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் கொண்ட குழு, ஜனாதிபதி டிரம்பின் வரிகள் மீதான மேல்முறையீட்டைக் கேட்டது, மேலும் 7 நீதிபதிகளின் ஒப்புதலுடன் முடிவு அறிவிக்கப்பட்டது.
கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்ட வரிகளைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது.