புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கும் ஸ்பெயினின் திட்டத்தில் சிக்கல்!
ஸ்பெயினில் புலம்பெயர் குடியேற்றவாசிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடு சர்ச்சைகளை கொண்டுவந்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து ஜூன் வரை இந்த முயற்சி நடைபெறும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியுள்ளது,
ஆனால் விண்ணப்ப செயல்முறை அல்லது தேவையான ஆவணங்கள் குறித்து சில விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விண்ணப்பங்களுக்கு கூடுதல் பட்ஜெட் அல்லது பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை என்று இடம்பெயர்வு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வமாக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் புலம்பெயர்ந்தோரையும், குடியேற்ற அலுவலகங்களில் பணியாற்றும் முன்னணி ஊழியர்களையும் அமைதியற்றவர்களாக்கியுள்ளது.




