வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!!
வீதியில் உலர வைத்த நெல்லுடன் சறுக்கி விழுந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்!!
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மொரவெவ பிள்ளையார் கோயில் அருகே இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து மொரவெவ பிரதேசத்திற்கு வேளாண்மை அறுவடைக்காக வந்த மெசின் இயந்திரத்திற்கு உடைந்த பொருட்களை பொருத்துவதற்காக உதிரி பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த இளைஞர் வீதியில் உலர வைத்த நெல்லில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்த நிலையில் படுகாயமடைந்தார்.
இதனை அடுத்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர் கிளிநொச்சி -வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த எஸ்.சுபனாத் ( 33வயது) எனவும் தெரியவந்துள்ளது.





