ஐரோப்பா

பிரான்ஸில் ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதிக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் Eurostar ரயிலின் மீது ஏற முற்பட்ட அகதி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு வருகை தந்த அகதி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்த EuroStar தொடருந்து தரித்து நின்ற பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏற முற்பட்டுள்ளார்.

அதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அகதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content