ஐரோப்பா செய்தி

பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து நெரிசல் – பயணிகளுக்கு அவசர அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில், பிரித்தானியா முழுவதும் போக்குவரத்து சேவைகள் மற்றும் வீதிகள் மிகுந்த நெரிசலுடன் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதி மற்றும் பயண தகவலுக்கான நம்பகமான அமைப்புகளின் தகவலுக்கமைய கிறிஸ்துமஸுக்கு முந்தைய வாரத்தில் மட்டும் 3.75 கோடி பயணங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானியா முழுவதும் எந்த ரயில் சேவையும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான லிவர்பூல் ஸ்ட்ரீட் நிலையம், கிறிஸ்துமஸ் தினம் முதல் புத்தாண்டு தினம் வரை, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த காலப்பகுதியில் பயணிகள், மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை செய்யுமாறும் முன்கூட்டியே ரயில் நேர அட்டவணையை சரிபார்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, வீதி நிலை, வானிலை மற்றும் போக்குவரத்து தகவல்களை சரிபார்த்து பயணம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள், அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரும்பாலான உள்ளூர் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!