இலங்கை

இலங்கையில் கிழமையில் இருநாட்களில் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இலங்கையில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்  திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்கிழமை (09) ஆகிய இரண்டு நாள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பல மாநில மற்றும் அரை மாநில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம், ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் சபை உறுப்பினர்கள் பலர் இன்று மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர்.

அங்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளர் டொக்டர் பிரபா சுகததாச, இந்த நாட்டில் சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கும் நோக்கங்கள் உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!