இலங்கை

எல்ல பாலத்தை அநாகரீகமான சித்திரங்களை வரைந்து சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர்  அஷேந்திர திஸாநாயக்க, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள்  சுவர்களில் பல்வேறு ஓவியங்களையும் கடிதங்களையும் எழுதி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“எல்லா ஒன்பது வளைவுப் பாலத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர் எனவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் மிகவும் கட்டுக்கடங்காமல் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.

சில இடங்களில் அநாகரீகமான சித்திரங்கள் வரையப்பட்டதாகவும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு அதிகம் கேடு விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகள் குறிப்பாக இந்த வரலாற்று இடத்தை பாதுகாக்க பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!