உலகம் செய்தி

மூன்று ஹிஸ்புல்லா தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதல்களால் பலி

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை அது தாக்கியுள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள 120 ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைகள் மேலும் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஆதரவுடன் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாா  அமைப்பின் ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்த தாக்குதல்களில் மூன்று ஹிஸ்புல்லா தளபதிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

அவர்களில், பின்ட் ஜபைல் பிராந்தியத்தில் உள்ள ஹிஸ்புல்லாஹ்வின் தளபதி அஹமட் ஜாபர் மதகு மற்றும் ஹிஸ்புல்லாவின் பீரங்கிப் படைத் தலைவர் ஆகியோரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!