வட அமெரிக்கா

அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி – இருளில் மூழ்கிய புளோரிடா மாநிலம்!

அமெரிக்காவை அண்மித்துள்ள மில்டன் சூறாவளி கரையைக் கடக்கத் தயாராகி வருகின்றது.

இந்த நிலையில், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான நேரம் கடந்துவிட்டதாக புளோரிடா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனவே, புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளின் மறு அறிவித்தல் வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.

மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், சூறாவளி கரையைக் கடப்பதற்கு முன்னதாகவே, புளோரிடா மாநிலத்தில் 125 வீடுகள் சேமடைந்துள்ளது.

அத்துடன், 2 இலட்சத்து 85 ஆயிரம் பாவனையாளர்கள் மின் இணைப்பை இழந்துள்ளனர்.

இந்தநிலையில், புளோரிடா முழுவதும் சூறாவளி எச்சரிக்கைகள் ஏற்கனவே அமுலில் உள்ளதுடன், மணிக்கு சுமார் 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)
See also  கறுப்பினத்தவரை அடித்து கொன்ற வழக்கு: காவலர் மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கிய அமெரிக்க கூட்டரசு நீதிமன்றம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content