மத்திய கிழக்கு

இடிபாடுகள் நடுவே கைகளால் தோண்டி எடுக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோரின் உடல்கள்;காசாவில் அவலம்

இஸ்ரேல் போருக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க உறவினர்கள் போராடி வருகின்றனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கிய பிறகு, பாலஸ்தீனத்தின் மீது போரை அறிவித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் பாலஸ்தீனத்தின் காசாவில் 11,500க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அத்துடன் இன்னும் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மீட்க முடியாமல் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் இஸ்ரேல் காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கி நடத்தி வருவதால் போதுமான அத்தியாவசிய வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மனிதாபிமான உதவிகளையும் 2 முறை தான் இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது.இதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மீட்பு பணிகளும் தொய்வடைந்து உள்ளது.

IDF says it has entered Gaza's largest hospital – as it happened |  Israel-Hamas war | The Guardian

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையால் காசாவில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் சிதைந்துள்ளன.இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் தங்களது உறவினர்களின் உடல்களை மீட்க இரும்பு கம்பிகளையும், வெறும் கைகளையும் பயன்படுத்தி கட்டிட இடிபாடுகளை அகற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்து சில நாட்கள் ஆவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content