இலங்கை

இலங்கையில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை!

நாட்டில் 40000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்தது.

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் 43 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 21 ஆசிரியர்களே உள்ளனர். மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியில் 63 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 33 பேரே உள்ளனர் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு தேவை. இவ்விரு பாடசாலைகள் மட்டுமின்றி ஏனைய பாடசாலைளிகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். இல்லையேல் இது முழு கல்வி முறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content