இலங்கை

நாட்டை வீழ்த்துவதுதான் அவர்களின் ஒரே இலக்கு – நாமல்!

நாட்டை வீழ்த்துவதுதான் போராட்ட காரர்களின் ஒரே இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று உண்மையாக போராட்டம் நடத்திய தரப்பினரைக்கூட சில அரசியல் கட்சிகள் திசை திருப்பின எனவும்,  அன்று எமது வீடுகளை எரித்தார்கள். வீடுகளை எரித்தவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்யக்கூட முடியாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஏனெனில் அவர்கள் மீது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திட்டமிட்ட தரப்பினர் இன்னமும் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ  குறைந்தது அவர்களிடம் வாக்குமூலம்கூட பெறப்படவில்லை’ எனவும் சாடினார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!