ஐரோப்பா

ரஷ்ய அதிபரின் பெற்றோருடைய புதைக்குழியை இழிவுப்படுத்திய பெண் கைது!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்த வெறுப்பே அந்த பெண்ணிண் இந்த நடவடிக்கைக்கு காரணம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புட்டினின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் குறிப்பிட்ட வெறிபிடித்தவரின் பெற்றோர் என குறிப்பொன்றை விட்டுச்சென்றார் என சுயாதீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புட்டினிற்கு மரணம்இநீங்கள் அசுரனை கொலைகாரனை வளர்த்தீர்கள் துண்டுக்குறிப்பில் தெரிவித்திருந்த அவர் புட்டின் மிகப்பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துவதால் அவரை உங்களுடன் எடுத்துச்செல்லுங்கள் எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

See also  பெல்ஜியம் தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் கைது

அவர் உயிரிழப்பார் என முழு உலகமும் பிரார்த்தனை செய்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content