இலங்கை

இந்தியா பறக்கிறது தமிழரசுக் கட்சியின் உயர் குழு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவினர் டில்லி செல்வதற்குரிய சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது தமிழரசுக் கட்சிக்கு டில்லி அழைப்பு விடுக்கவுள்ளமை தொடர்பில் தூதுவர் சமிக்ஞைகளை வெளிப்படுத்தினார் என தெரியவருகின்றது.

இலங்கையிலுள்ள பிரதான கட்சிகளின் பிரமுகர்களை புதுடெல்லி அழைத்து பேச்சு நடத்திவருகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் இந்தியா சென்றார். ஜே.வி.பியின் செயலாளர் டிசம்பரில் அங்கு செல்கின்றார். இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியையும் டில்லி அழைக்கவுள்ளது என தெரியவருகின்றது.

சுமந்திரன் மற்றும் சாணக்கியனுடனான சந்திப்பின்போது இந்திய – இலங்கை உறவுகள் மற்றும், இலங்கை அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று இந்திய தூதுரகத்தின் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரமுகர்களையும் இந்திய தூதுவர் சந்திக்கவுள்ளார். சிலவேளை தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரமுகர்களை டில்லி கூட்டாக அழைப்பதற்குரிய சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகின்றது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!