உணவின் விலையும் அதிகரிப்பு!
இன்று (04.11) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று (04.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேயிலையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலையும் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
(Visited 16 times, 1 visits today)





