ஐரோப்பா

ஜேர்மனில் குற்றவாளியை கண்டுப்பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஜேர்மன் – ஓல்டன்பேர்க்கில் உள்ள ஜெப ஆலயத்தில் தீ வைத்த குற்றவாளிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதிகள் வழங்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5,000 யூரோக்களை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

ஜெப ஆலயத்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியதால் சிறிய சேதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அங்கு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடியுள்ளார்.

இந்த கொடூரமான செயல் நாடு தழுவிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் காஸாவில் நடந்த போருக்குப் பிறகு ஜெர்மனியில் யூத எதிர்ப்பு குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!