இந்தியா

வன்கொடுமை செய்து அவமதிக்கப்பட்ட நபர்… காலை கழுவி மரியாதை செய்த முதலமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் கால்களை கழுவி, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுஹான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மத்திய பிரதேசம் மாநிலம், சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மது போதையில் மனநலம் பாதித்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நிலையில், பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், முதலமைச்சரின் உத்தரவுப்படி பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.

இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், சிறுநீர் கழித்து துன்புறுத்தப்பட்ட பழங்குடியின நபர் தஷ்மத் ராவத்தை, தனது வீட்டிற்கு வரவழைத்து பாதங்களை கழுவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content