இலங்கை

நம்பிக்கையிழந்து லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசிய நபர்… பின்னர் நேர்ந்த ஆச்சர்யம்!

கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது சுனில் குமார். இவர் ஆட்டோ சாரதியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் லொட்டரி டிக்கெட் ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். ஆனால், தமக்கு அதில் பரிசு விழ வாய்ப்பில்லை என அவர் நினைத்துள்ளார்.இதனால் அவர் அந்த லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து பரிசு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதையறிந்த சுனில் குமார் விரைந்து சென்று குப்பையில் வீசிய லொட்டரி டிக்கெட்டை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.அதனை சரிபார்த்தபோது தனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

இதன் காரணமாக ஒரே நாளில் ஆட்டோ சாரதியாக இருந்து சுனில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!