அரசியல் இலங்கை செய்தி

அரசின் ஆயுள் மக்கள் கைகளுக்குள்: கோட்டா ஆட்சியை உதாரணம் காட்டுகிறார் ராஜித!

“ஆட்சியைக் கவிழ்ப்பது மக்களின் பணி, அதனை நாம் செய்யமாட்டோம்.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார்.

புத்தாண்டில் எதிரணியின் அரசியல் செயல்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் அனுப்பினார்கள்.

எனவே, அரசாங்கத்தின் ஆயுளென்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.

நாடு முன்னால் உள்ள சவால்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்கொண்டால் நல்லது. ஆனால் அதற்குரிய சாத்தியம் உள்ளதா என்பது சந்தேகமே.

அதேவேளை, வெனிசுலாமீதான அமெரிக்காவின் தாக்குதல் முழு உலகுக்கும் அச்சுறுத்தலாகும்.” – என்றார் ராஜித.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!