ஐரோப்பா

அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றி எரிந்த தீ; தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதி!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீ, இளம் தாய் ஒருவரையும், அவரது பதின்ம வயது மகனையும் பலிகொண்டுவிட்டது.

கடந்த வியாழக்கிழமை, ஜெனீவாவிலுள்ள Lignon என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் தீப்பற்றியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், கட்டிடத்திலிருந்து வெளியேறுவதற்கான படிக்கட்டுகளில், படுகாயமடைந்த நிலையில் ஒரு 28 வயது பெண்ணும், அவரது மகனான 13 வயது சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டனர்.தீயிலிருந்து தப்பி வெளியேற முயலும்போது அவர்கள் தீயில் சிக்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்துவிட்டான். தற்போது, சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம் தாயும் சனிக்கிழமையன்று உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

தாயும் மகனும் தீயில் சிக்கி பலியான விடயம் அப்பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், எதனால் தீப்பற்றியது என்பது தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 22 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்