வட அமெரிக்கா

17 வயது கேரள மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேரள மாணவர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் கைப்புழா பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் 1992ம் ஆண்டு வேலை காரணமாக தன் மனைவி ராணியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.பின் மனைவி ராணியும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சன்னி-ராணி ஜோடிக்கு ஜாக்சன், ஜோதி மற்றும் ஜாஸ்மின் என்ற மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் மூவரும் தங்கள் அமெரிக்கா பள்ளியில் தங்கள் கல்வியை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் 17 வயதுடைய மகன் ஜாக்சன் அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் சுட்டுக் கொன்ற நபர் எதற்காக இத்தகைய வன்முறையில் இறங்கினார், மற்றும் அது யார் என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.இதனிடையே குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடும்பம் அமெரிக்காவில் மகன் ஜாக்சனின் இறுதி சடங்கை நடத்த இருப்பதாக கேரளாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இது போன்று கேரள மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content