ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சீன கும்பல் – தீவிர விசாரணையில் பொலிஸார்

சிங்கப்பூரில் அண்மையில் நடந்து வரும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு கும்பலைச் சேர்ந்த சீன குடிமக்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூவரைக் பொலிஸார் இதுவரை கைதுசெய்துள்ளனர். அவர்கள்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விசாரணைகளில் உதவக்கூடிய 14 சீனர்களைக் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் இப்போது சிங்கப்பூரில் இல்லை என தெரியவந்துள்ளது.

அவர்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர்க் பொலிஸார் சீன அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் முதல் இம்மாதம் 4ஆம் திகதி வரை நடந்த வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் பெரும்பாலானவை தனியார் குடியிருப்பு வட்டாரங்களில் நடந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகள் Rail Corridor பகுதிளையும் புக்கிட் தீமா சாலைப் பகுதியில் இருக்கும் தனியார் குடியிருப்பு வட்டாரங்களையும் சேர்ந்தவை. அந்தக் காலக்கட்டட்தில் 10 சம்பவங்கள் புகார்கள் பதிவாயின.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content