இலங்கை

(NEW UPDATE) தலாவ பேருந்து விபத்து – உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் உயிரிழப்பு!

அனுராதபுரம் – தலாவ பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று இடம்பெற்ற நிலையில், தற்போது விபத்து தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும், அவர்களில் குறைந்தது 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலாவ பகுதியில் இருந்து கிராமம் 411 க்கு பயணித்த தனியார் பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.

 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து!

அனுராதபுரம் – தலாவ பகுதியில் உள்ள ஜெயகங்கா சாலையில் பேருந்தொன்று இன்று  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் பல மாணவர்கள் குறித்த பேருந்தில் பயணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள்  தம்புத்தேகம மற்றும் தலாவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 3 times, 6 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!