ஐரோப்பா

பிரித்தானியா : மென்செஸ்டரில் ஜெப ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்ற நிலை – நால்வர் படுகாயம்!

பிரித்தானியாவின் மென்செஸ்டரில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றில் பொதுமக்களை நோக்கி பயணித்த காரினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (02.10) காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அவசர அழைப்பை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், மற்றும் துணை மருத்துவர்கள் காயமடைந்த  நான்கு பேரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் குற்றவாளி என அறியப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் மக்களை நோக்கி சென்றதற்கான காரணமும், தாக்குதல்தாரி கத்தி குத்து தாக்குதலை ஏன் மேற்கொண்டார் என்பதற்கான காரணத்தையும் பொலிஸார் வெளியிடவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்