வட அமெரிக்கா

அமெரிக்காவில் பதற்றம் – 22 பேர் சுட்டுக்கொலை – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அமெரிக்காவின் லெவிஸ்டனில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 22 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் அந்த பகுதியில் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 50 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெவிஸ்டனில் நபர் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கிதாக்குதலில் ஈடுபட்டுள்ளார் மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கதவுகளை மூடிவிட்டு வீடுகளிற்குள் இருக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் பல இடங்களில் மக்களிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளன.

(Visited 8 times, 1 visits today)
See also  மதுபானம் மற்றும் பணத்திற்காக குழந்தையை விற்க முயன்ற அமெரிக்க தம்பதியினர்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content