ஐரோப்பா

பின்லாந்து கடற்பகுதியில் தொலைத்தொடர்பு கேபிளில் சேதம் – கைப்பற்றப்பட்ட கப்பல்!

பின்லாந்து வளைகுடாவில் கடலுக்கடியில்  நேற்று தொலைத்தொடர்பு கேபிளில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பலை பின்லாந்து அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்ததாக எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்லாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் அக்கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

ஹெல்சின்கி (Helsinki) காவல்துறையினர்  மோசமான குற்றவியல் சேதம்,   குற்றவியல் சேத முயற்சி மற்றும் தொலைத்தொடர்புகளில் மோசமான குறுக்கீடு என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “பல்வேறு வகையான பாதுகாப்பு சவால்களுக்கு பின்லாந்து தயாராக உள்ளது. மேலும் நாங்கள் அவற்றுக்குத் தேவையானபடி பதிலளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!