உலகம் செய்தி

தைவான் கத்தி குத்து சம்பவம் – ஒரு வருடம் காத்திருந்த தாக்குதல்தாரி!

தைவானின் தலைநகரில் மூன்று பேர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் குறித்த பல முக்கிய தகவல்களை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே இந்தத் தாக்குதலை கவனமாகத் திட்டமிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான சாங் வென் (Chang Wen) என அடையாளம் காணப்பட்ட தாக்குதல்தாரி,  தைபே மெட்ரோ நிலையத்திலும் தெருவிலும் வழிப்போக்கர்களைக் கத்தியால் குத்தி, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்.  இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் தாக்குதல்தாரி ஒரு பல்பொருள் அங்காடியின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தைவானை உலுக்கியுள்ள நிலையில், தற்போது காவல்துறையினர்  பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!