ஆசியா

அமெரிக்காவிடம் இருந்து 1,000 ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தைவான்

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய 1,000 வானூர்திகளை அமெரிக்காவில் இருந்து வாங்குவதற்கான சம்பிரதாய ஒப்பந்தங்களில் தைவான் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டு உள்ளது.

‘ஏரோவிரான்மண்ட்’ (AeroVironment) ‘ஏண்டுரில் இண்டஸ்ட்ரீஸ்’ (Anduril Industries) ஆகிய அமெரிக்கக் குத்தகையாளர்களிடம் இருந்து வாங்கப்படுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.

தன் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்த்து சமாளிக்க அந்த வானூர்திகளை தைவான் வாங்குவதாக அந்தப் பரிவர்த்தனை தொடர்பான துறையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, செப்டம்பர் மாத பிற்பாதியில் ஏற்புக் கடிதம் ஒன்றில் தைவான் கையெழுத்திட்டது.

வானூர்திகளின் தரம், விலை மதிப்பு மற்றும் விநியோக திகதிகள் குத்தகைப் பத்திரங்களில் விவரிக்கப்பட்டு உள்ளன. அந்தப் பத்திரங்களில் தைவான் விரைவில் கையெழுத்திடும் என்று பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க வானூர்திகளை தைவான் வாங்குவது தொடர்பாக எந்த ஓர் அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.மேலும், அமெரிக்கத் தற்காப்புத் துறையின் பேச்சாளரும் அந்தக் கொள்முதல் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். வாஷிங்டனில் உள்ள தைவான் அலுவலகப் பிரதிநிதிகளும் அதுபற்றி வாய்திறக்கவில்லை.

(Visited 23 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!