உலகம் செய்தி

குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை விதிக்க சுவிஸ் உள்துறை அமைச்சர் பரிந்துரை

சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுவிட்சர்லாந்து(Switzerland) இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் எலிசபெத் பாம்-ஷ்னைடர்(Elisabeth Baum-Schneide) குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின்(Australia) 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து இதே போன்ற நடவடிக்கைகளை ஆராய வேண்டும் என்று பாம்-ஷ்னைடர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், சுவிஸ் மாகாணமான பிரிபெர்க்(Fribourg), 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்துவதைத் தடை செய்ய வாக்களித்தது.

இது பாடசாலைகளில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க சுவிட்சர்லாந்தில் உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கையாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!