சுரேஷ் சலே கைது: பொலிஸார் கூறுவது என்ன?
விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே Suresh Sallay கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பேச்சாளர் எவ்.யு. வூட்லர் E.U. Woodler மேற்படி தெளிவுபடுத்தலை வழங்கினார்.
“ அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
இதற்கமைய வெளியாகியுள்ள உறுதியான சாட்சிகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவர் ஒப்படைக்கப்படுவார்.” எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.





