ஐரோப்பா

புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துங்கள் : பிரித்தானியாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்காமில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலுக்கு அருகில், புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முகத்தை மூடிக்கொண்ட பலர் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

எதிர்பாளர்கள் நாடு கடத்துவதை நிறுத்துங்கள் என கோஷமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் நாடு கடத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் துரதிஷ்ட வசமாக குறித்த கப்பலில் லெஜியோனெல்லா பக்றீரியா வெடிப்பு ஏற்பட்டதால் அந்நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டிசம்பரில், கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர், அந்த நபர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் தங்கவைப்பதன் மூலம் மில்லியன் கணக்கான பவுண்ட் செலவாகுவதாக பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளவர்லி தெரிவித்துள்ளார்.

ஆகவே வரும் ஜுலை மாதம் விமானங்கள் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என முன்னதாக ரிஷி சுனக் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 21 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்