மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பியோடிய இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை!
மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களில் முதல் தொகுதியினர் இன்று இந்தியாவிற்கு திருப்பியனுப்படவுள்ளனர்.
மியன்மாரின் எல்லை நகரமான மியாவதியின் (Myawaddy)புறநகரில் உள்ள கே.கே. பார்க் (KK Park) என்று அழைக்கப்படும் மையம் எல்லை தாண்டிய ஆன்லைன் மோசடிகள் மற்றும் சட்டவிரோத சூதாட்டத்திற்கு பிரபலமான இடமாகும்.
கடந்த ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 28 நாடுகளைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தாய்லாந்திற்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவர்களில் முதல் தொகுதி இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் அவர்களை அழைத்து வர தாய்லாந்திற்கு புறப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
465 இந்தியர்களில் சுமார் 270 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மீதமுள்ளவர்கள் அடுத்த திங்கட்கிழமை தாய்லாந்திலிருந்து புறப்படுவார்கள் என்று தாய் இராணுவத்தின் வடக்குப் பகுதியான நரேசுவான் பணிக்குழுவின் தளபதி மேஜர் ஜெனரல் மைத்ரீ சுப்ரீச்சா (Maitree Chupreecha) தெரிவித்துள்ளார்.





