இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இரு பௌத்த தேரர்களை களமிறக்கிய இலங்கையின் முக்கிய அரசியல் கட்சி!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  இரு பௌத்த தேரர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளது.

பௌத்த பிக்குகளான வணக்கத்துக்குரிய கிரிபனாரே விஜித தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.

“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்தேன் என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் ஒரே முயற்சியே தவிர, நாங்கள் பதவிகளின் பின்னால் செல்லவில்லை. நாங்கள் ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்”என்றும் விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!